basil
செய்திகள்அரசியல்இலங்கை

பஸிலுக்கு எதிராகப் பிரேரணை! – சஜித் அணி திட்டவட்டம்

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

“நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறாமை, நிதி நெருக்கடியை ஏற்படுத்தியமை, மக்கள் மீது விலையேற்றம் என்ற சுமையைத் திணித்தமை உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பிரேரணை முன்வைக்கப்படும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுந்தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. சாதாரண பெரும்பான்மைகூட ஊசலாடும் மட்டத்திலேயே உள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதான எதிரணி இப்படியொரு வியூகத்தை கையாள எதிர்பார்த்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...