800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்!
இந்தியாசெய்திகள்

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்!

Share

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்!

ஒடிசா மாநிலத்தில் வறுமையின் காரணமாக 8 மாதம் ஆன பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு, இவரது கணவர் முசு, தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது.

வறுமையின் காரணமாக தாய் கராமி முர்மு, குழந்தையை இனி நாம் வளர்க்க முடியாது என நினைத்து குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதனையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பி வந்த முசு 2 ஆவதாக பிறந்த பெண் குழந்தையை பற்றி கேட்டுள்ளார். அதற்கு, குழந்தை இறந்துவிட்டதாக முர்மு கூறியுள்ளார்.

ஆனால், சந்தேகமடைந்த முசு போலீசில் புகார் அளித்துள்ளார். 800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்றது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், தாய் முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி, ஏற்பாடு செய்த நபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...