17334765974
செய்திகள்இலங்கை

தாயும் மூன்று வயது மகனும் சடலமாக மீட்பு – குடும்பத் தகராறில் கொலை-தற்கொலையா என சந்தேகம்

Share

காலி – படபொல, கஹட்டபிட்டிய, பொல்லுன்னாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த மூன்று வயது சிறுவனின் சடலமும், கயிற்றில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் இன்று (27) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக படபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் வசிக்கும் லகிது சம்பத் என்ற மூன்று வயது மற்றும் ஆறு மாத சிறுவன் மற்றும் சிறுவனின் தாயான இருணி நெத்யா தில்ருக்ஷி ஆகியோரே என தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்ட பெண், தனது மகனை கொன்றுவிட்டு, பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பியதாகவும், அவர் திருமணமானவராக இருந்தபோதிலும், தனது கணவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை மற்றும் தற்கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

சம்பவம் குறித்து படபொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...