articles2FAfYyFG6VMBPPETala7Mp
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மனைவியின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர்: மொனராகலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு!

Share

தனிப்பட்ட தகராறு காரணமாகத் தனது மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துப் படுகொலை செய்த கணவருக்கு, மொனராகலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மொனராகலை, ஹுலந்தாவ தெற்கு, கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த யடபாலகே நீல் ஸ்டான்லி ஜெயரத்ன என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, இவர் தனது மனைவியான கே.எம். சுஜாதா என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ், சட்டமா அதிபரால் குறித்த நபருக்கு எதிராக மொனராகலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான நீண்ட விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 16-ஆம் திகதி மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகர முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது:

பிரதிவாதி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் அரச சட்டவாதி துமிந்த டி அல்விஸ் வழக்கை மெய்ப்பித்தார். பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சோமரத்ன ஹேரத் முன்னிலையானார்.

குடும்ப வன்முறை மற்றும் கொடூரமான முறையில் உயிரைப் பறிக்கும் இத்தகைய செயல்களுக்கு நீதித்துறை வழங்கும் இத்தீர்ப்பு, சமூகத்தில் ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...