வவுனியா கொக்குவெளிப் பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற 16 வயதுடைய சிறுவனை காணவில்லை.
வவுனியா கொக்குவெளிப்பகுதியை சேர்ந்த அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே காணாமல் போயுள்ளார்.
அப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சென்ற போதே இவ்வாறு காணவில்லை.
அதிக நேரம் சிறுவனை காணாத நண்பர்கள் கிராமத்தவர்களுக்கு அறிவித்த நிலையில், கிராமத்தவரகள் கிணற்றினுள்ள இறங்கி தேடுதல் நடாத்தியும் நீண்டநேரமாகி குறித்த சிறுவனை மீட்கமுடியவில்லை.
இதனையடுத்து கடற்படையினரின் உதவி கோரப்பட்டு தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews

