சூழல் பாதுகாப்புக்கு புதிய துரித இலக்கம் அறிமுகம்: வன பாதிப்புகள் குறித்து 1995-க்கு அழைக்கலாம்! 

00000187 c316 d630 a597 f71fe3f10000

இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் இலகுவாக வழங்குவதற்காக, சுற்றாடல் அமைச்சு ஒரு புதிய துரித இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1995 என்ற இந்தத் துரித இலக்கத்தின் ஊடாகப் பொதுமக்கள், வன அமைப்புக்கோ அல்லது சூழலுக்கோ ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களை நேரடியாக வழங்க முடியும்.

இந்த இலக்கம் நாளை (நவம்பர் 03) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் குற்றங்களைக் கண்டறிவதிலும், வன வளங்களைப் பாதுகாப்பதிலும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Exit mobile version