R 8
இந்தியாசெய்திகள்

உதயநிதி தாத்தா வீட்டு காசில் பேருந்து நிலையம் கட்டப்பட்டதா என்ற சீமானின் கேள்விக்கு அமைச்சரின் பதில்

Share

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கருணாநிதியின் பெயரை வைப்பதில் தவறில்லை என சீமானுக்கு தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

சீமான் பேசியது..
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 -ம் திகதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த பேருந்து நிலைய விவகாரத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்ன உதயநிதி தாத்தா வீட்டு காசில் கட்டப்பட்டதா, அதற்கு ஏன் கலைஞர் கருணாநிதி பெயர் வைத்தீர்கள்.

அதிமுக ஆட்சியிலேயே பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை தான் திமுக முடித்து வைத்துள்ளது” என்றார்.

தமிழக அமைச்சர் பேசியது…
இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சேகர் பாபு, “தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கலைஞர் கருணாநிதியின் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வைத்ததில் எந்த தவறும் இல்லை.

அனைத்து தமிழக மக்களுக்காக உழைத்த அனைவருக்கும் பெருமை சேர்ப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி சீமானுக்கு பதிலாகக் கூற கடமைப்பட்டுள்ளேன் ” என்றார்.

Share
தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...