R 8
இந்தியாசெய்திகள்

உதயநிதி தாத்தா வீட்டு காசில் பேருந்து நிலையம் கட்டப்பட்டதா என்ற சீமானின் கேள்விக்கு அமைச்சரின் பதில்

Share

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கருணாநிதியின் பெயரை வைப்பதில் தவறில்லை என சீமானுக்கு தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

சீமான் பேசியது..
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 -ம் திகதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த பேருந்து நிலைய விவகாரத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்ன உதயநிதி தாத்தா வீட்டு காசில் கட்டப்பட்டதா, அதற்கு ஏன் கலைஞர் கருணாநிதி பெயர் வைத்தீர்கள்.

அதிமுக ஆட்சியிலேயே பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை தான் திமுக முடித்து வைத்துள்ளது” என்றார்.

தமிழக அமைச்சர் பேசியது…
இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சேகர் பாபு, “தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கலைஞர் கருணாநிதியின் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வைத்ததில் எந்த தவறும் இல்லை.

அனைத்து தமிழக மக்களுக்காக உழைத்த அனைவருக்கும் பெருமை சேர்ப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி சீமானுக்கு பதிலாகக் கூற கடமைப்பட்டுள்ளேன் ” என்றார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...