R 8
இந்தியாசெய்திகள்

உதயநிதி தாத்தா வீட்டு காசில் பேருந்து நிலையம் கட்டப்பட்டதா என்ற சீமானின் கேள்விக்கு அமைச்சரின் பதில்

Share

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கருணாநிதியின் பெயரை வைப்பதில் தவறில்லை என சீமானுக்கு தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

சீமான் பேசியது..
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 -ம் திகதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த பேருந்து நிலைய விவகாரத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்ன உதயநிதி தாத்தா வீட்டு காசில் கட்டப்பட்டதா, அதற்கு ஏன் கலைஞர் கருணாநிதி பெயர் வைத்தீர்கள்.

அதிமுக ஆட்சியிலேயே பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை தான் திமுக முடித்து வைத்துள்ளது” என்றார்.

தமிழக அமைச்சர் பேசியது…
இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சேகர் பாபு, “தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கலைஞர் கருணாநிதியின் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வைத்ததில் எந்த தவறும் இல்லை.

அனைத்து தமிழக மக்களுக்காக உழைத்த அனைவருக்கும் பெருமை சேர்ப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி சீமானுக்கு பதிலாகக் கூற கடமைப்பட்டுள்ளேன் ” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...