சதொச விற்பனையகங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த நடைமுறை இன்று (6) முதல் அமுலாகும் என்று வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 04 ஆம் திகதி முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, சதொசவில் அரிசி மற்றும் சீனி என்பவற்றை கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக 5 பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, இன்று முதல் இம்முறை பின்பற்றப்படமாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment