செய்திகள்அரசியல்இலங்கை

வடக்கில் மேலும் பல நிலங்கள் வனவள திணைக்களத்தினருக்கு!!!

Share

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 706 ஹெக்டேயரை சுவீகரித்துள்ள வனவளத் திணைக்களம் இன்னமும் 7 ஆயிரத்து 297 ஹெக்டேயரை சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சுவீகரிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பின் 42 சதவீதம் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். மேலும், போரின் பின்னரே, 37 இடங்கள் வனவளத் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ.) ஊடாக இந்தத் தகவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 ஆயிரத்து 299 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2019ஆம் ஆண்டே சுவீகரிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 53 ஆயிரத்து 852 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 73 ஆயிரத்து 362 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 8 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 253 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 10 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 72 ஆயிரத்து 940 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 7 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

வனவளத்திணைக்களம் வழங்கிய தகவலில் சுவீகரிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 152 ஹெக்டேயரும், வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 25 ஹெக்டேயரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 595 ஹெக்டேயரும், மன்னார் மாவட்டத்தில் 516 ஹெக்டேயரும் உள்ளடங்குகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...