ஒமிக்ரோன் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமண்யன் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் லேசான ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தல் சட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது தமிழக அரசு.
ஒமிக்ரோன் தீவிரப் பரவலால் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட்டமாகக் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வேறு மாநிலங்கள் செல்வதையும், நட்சத்திர விடுதிகளில் ஒன்று கூடுவதையும் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#IndiaNews