ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

kurunagale

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே இவ்வாறு மூன்று லட்சம் பெறுமதியான தொலைபேசி திருடப்பட்டுள்ளது.
உனவட்டுன சுற்றுலாப் காவல் பிரிவின் அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமையக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் தொடர்பில் மேலதிகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Exit mobile version