samayam tamil 1 scaled
செய்திகள்உலகம்

கருக்கலைப்பு செய்வதை சட்ட உரிமையாக்குங்கள்! – பெண்கள் ஆர்ப்பாட்டம்

Share

மெக்சிக்கோவில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமையளிக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெக்சிகோவில் 4 மாநிலங்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டப்படி உரிமை காணப்படுகின்றது.

இந்நிலையில் கருக்கலைப்பை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் கருக்கலைப்பு செய்ய செல்லும் போது கூட அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலை மெக்சிக்கோவில் காணப்படுகின்றது.

ஆகவே இந்நிலை எந்த வகையில் நியாயம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பேரணியாகச் சென்றவர்களை காவல்துறையினர் தடுக்க முற்பட்ட போது தடுப்புகளை தகர்த்தும், சமிக்ஞை விளக்குகளை உடைத்தும் பெண்கள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...