8b4dfecf8de4c5a7f68822318193795c M
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் கைதிகளுக்காக அரசியல் தீர்மானமொன்றை எடுங்கள் – சாள்ஸ்

Share

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் உரையாற்றிய அவர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 1994 இல் கைது செய்யப்பட்டவர்கள்கூட இன்னும் சிறையில் உள்ளனர். வழக்கு முடிவதற்கு சிரமமாக உள்ளது. விரைவாக விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதம் அரச தரப்பில் வழங்கப்பட்டது.

ஆனாலும் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படவில்லை. சாட்சியங்கள் இல்லை. குற்ற ஒப்புதல் மட்டுமே பெறப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும், மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது.

எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அல்லது புனர்வாழ்வின் பின்னராவது விடுவிப்பதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.என்றார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...