MediaFile 3
செய்திகள்இலங்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உச்சம்: ஹங்வெல்ல பகுதியில் பெரும் வெள்ள அபாயம்!

Share

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக, ஹங்வெல்ல (Hanwella) மற்றும் அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை (Major Flood Situation) காணப்படுகிறது என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில் நீர் மட்டம் 9.78 மீட்டர் எனப் பதிவாகியுள்ளது. இது ஏறக்குறைய ஒரு பெரும் வெள்ள நிலைமை எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாகலகம் வீதியில் உள்ள அளவீடு 8.35 அடியாகக் காணப்படுவதுடன், இது அண்மைய வரலாற்றில் பதிவான அதிகபட்ச நீர் மட்டம் என்றும் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை: தொடர்ந்து நீர் மட்டம் அதே மட்டத்தில் காணப்படுவதாகவும், நீர் மட்டம் மேலும் அதிகரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணையானது தற்போது திட்டமிடப்பட்ட நீர் மட்டத்தின் அதிகபட்ச உச்ச அளவை அடைந்துள்ளது.

எதிர்காலத்தில் ஏதாவது ஆபத்து ஏற்படின், உடனடியாக அறிவிக்க எதிர்பார்ப்பதால், வெள்ள அணைக்கு அருகில் வசிக்கும் அனைவரும் அந்த அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 12
இலங்கைசெய்திகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை சடுதியாக உயர்வு: ஒரு கிலோ கரட் ரூ.1000 வரை விற்பனை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு (Dambulla Economic Centre)...

images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...