WhatsApp Image 2026 01 06 at 20.24.06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் பாரிய வெடிபொருள் சேகரிப்பு மீட்பு: வயல் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆர்.பி.ஜி குண்டுகள்!

Share

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பகுதியில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சக்திவாய்ந்த வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் (STF) நேற்று (06) மீட்டுள்ளனர்.

38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் இதன்போது மீட்கப்பட்டன.

இப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர், தனது வயலைச் சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியுள்ளார். இதன்போது நிலத்தின் அடியில் மர்மப் பொருட்கள் இருப்பதைக் கண்டு அவர் உடனடியாக வாகரை விசேட அதிரடிப் படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிரடிப் படையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தத்தின் போது இவை இப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...