களனி கங்கையை பாதுகாக்க முனைகிறாராம் மஹிந்த அமரவீர!!

image d417426e1c

களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் வீசப்படும் 1,500 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறான இடங்களை இலங்கை கடற்படையின் உதவியுடன் தூய்மைப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இவற்றை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கண்காணிக்கவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆறுகளை பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில் களனி கங்கையின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிக்க சுற்றாடல் அமைச்சு உத்தேசித்துள்ளது.

#SrilankaNews

Exit mobile version