13 18
செய்திகள்

திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: பலர் வைத்தியசாலையில் அனுமதி

Share

திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: பலர் வைத்தியசாலையில் அனுமதி

மடுல்சிம – பிடமருவ வீதியின் பொல்வத்த பிரதேசத்தில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி அணையில் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில்த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளதாக மடுல்சிம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு விபத்தல் படுகாயமடைந்ததவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இ்த விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மடுல்சிம – பிடமருவ பிரதேசத்தில் உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு வானில் நுவரெலியா நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் வானின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், விபத்தின் போது வானில் 12 பேர் பயணித்ததாகவும், அவர்களில் நால்வர் காயமின்றி தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...