யாழ் வந்த சொகுசு பேருந்து விபத்து – பலர் படுகாயம்!!!

கொழும்பிலிருந்து யாழ் வந்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் மதவாச்சிக்கும் – கிரிகொல்லாவுக்கும் இடைப்பட்ட 145 வது மைல் கல்லிற்கு அருகிலுள்ள வளைவில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

264055856 5534234933270724 5972628020389659614 n

விபத்தின் போது பஸ் உருண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த பலர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

 

 

Exit mobile version