கனமழை காரணமாக தம்பலகாமத்தின் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

25 692286ceb2572

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த வெள்ளச் சூழ்நிலை காரணமாக, இன்று புதன்கிழமை (நவம்பர் 26) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்தனர்.

சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிலைமையை கேட்டறிந்தனர்.

நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பில் ஆய்வு செய்த அதிகாரிகள், உடனடியாக வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால், பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதியில் பயணிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றது.

Exit mobile version