யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், யாழ்ப்பாண காவல் போதை தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தங்கி இருந்தமை தொடர்பு விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினர் இன்று 24-10-2025) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் இருந்து மேற்படி கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சான்று பொருட்களும் கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது