புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

போதைப்பொருளுடன் கைது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் ஐஸ் ரகப்போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 455 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே கைதாகியுள்ளார்.

அவரை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

 

Exit mobile version