tamilni 422 scaled
இலங்கைசெய்திகள்

இளம் தாய் ஒருவரின் கொடூர செயல்

Share

இளம் தாய் ஒருவரின் கொடூர செயல்

அனுராதபுரம், தம்புத்தேகம தேக்கவத்தை பகுதியில் சிசுவை புதைத்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த இவர், காலதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குழந்தை உருவாகி 6 மாதமாக இருக்கும் போது கருவை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சிசு புதைக்கப்பட்ட இடத்தை தம்புத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை ஜனவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...