18 15
இலங்கைசெய்திகள்

அதிபர் ரணிலிடம் இளம் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை

Share

அதிபர் ரணிலிடம் இளம் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(ranil wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது பரபரப்பாக பேசப்படும் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் அமைச்சரவையில் சமர்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ள நிலையிலேயே இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானம் எடுப்பார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...