கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்
இலங்கைசெய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்

Share

கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குடும்பத்தினர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பெண் சுயநினைவு பெறாமல் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று (06.07.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இறந்த பெண்ணின் கணவர், அறுவை சிகிச்சைக்கு சுயநினைவை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஊசியால் தனது மனைவி இறந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கொஸ்கொட, பொரலுகெட்டிய தெற்கில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார், அண்மையில் தேசிய கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வாமை காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கமைய, அவருக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு அவருக்கு சுயநினைவு திரும்பாமல் உயிரிழந்துள்ளார்.

இறந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் பின்னர், உடலின் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக குழு ஒன்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 6823d086c8e1c
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழரசுக்கட்சியை அழித்தவரே வெளியில் இருந்து அமைச்சர்களைப் பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து’ – எம்.பி. இளங்குமரன் ஆவேசம்!

தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப்...

MediaFile 2 5
இலங்கைபிராந்தியம்

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் சபையின் விசேட முகாம்: பெரிய கரிசல் கிராமத்தில் ஒரே நாளில் புதிய இணைப்புச் சேவை!

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய...

images 2 9
செய்திகள்இலங்கை

நாளை மிரிஹானை பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து மாற்றம்: மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள...

japan sri lanka flags
செய்திகள்இலங்கை

5000 ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள்: இலங்கையில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டம்!

2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை...