கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்
இலங்கைசெய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்

Share

கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குடும்பத்தினர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பெண் சுயநினைவு பெறாமல் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று (06.07.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இறந்த பெண்ணின் கணவர், அறுவை சிகிச்சைக்கு சுயநினைவை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஊசியால் தனது மனைவி இறந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கொஸ்கொட, பொரலுகெட்டிய தெற்கில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார், அண்மையில் தேசிய கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வாமை காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கமைய, அவருக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு அவருக்கு சுயநினைவு திரும்பாமல் உயிரிழந்துள்ளார்.

இறந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் பின்னர், உடலின் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக குழு ஒன்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...