24 66113fcef0917
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்த 14 வயது சிறுமி

Share

இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்த 14 வயது சிறுமி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட சிறப்பு சம்பவங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறன.

இந்தப் போட்டியில் 14 வயதான சாமுதி பிரபோதா என்ற சிறுமி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சாமுதி பிரபோதா மொனராகலை மாவட்டத்தில் உள்ள கும்புக்கன கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் தற்போது இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளராகும்.

14 வயதில் தேசிய மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை சிறப்பம்சமாகும். அது மட்டுமன்றி மொனராகலை போன்ற கடினமான பிரதேசத்திலிருந்து தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.

அவரது பகுதியில் தேசிய அளவில் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இதுவரையில் எவரும் உருவாக்க முடியவில்லை. ஆனால் இம்முறை 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான வீராங்கனைகள் இது போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து வந்த மிகவும் திறமையான வீராங்கனைகள் என தெரியவந்துள்ளது.

கஷ்டப்பகுதி கிராமங்களை சேர்ந்த சிறுமிகள் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், உலகின் தலைசிறந்த பெண்கள் அணிகளான இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இளம் பெண்கள் அணிகளை இலங்கைக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தப்பட்டு வருகின்றது.

மகளிர் கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...