கட்டுநாயக்கவில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி

Share

கட்டுநாயக்கவில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் விமான நிலையத்தின் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

குறித்த தம்பதி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 86
செய்திகள்இலங்கை

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு: சர்வதேச சந்தையில் மாற்றம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு...

Untitled 85
செய்திகள்உலகம்

அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக இராணுவ வானூர்தியைத் தங்கள் படைகள்...

Untitled 84
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான புயல்...

Untitled 83
இலங்கைசெய்திகள்

நெல்லையில் விஜய் பிரம்மாண்ட பிரசாரம்: தென்மாவட்டங்களில் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்...