tamilni 144 scaled
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் யுக்திய

Share

இலங்கை பொலிஸார் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தேடல் நடவடிக்கைகளின் போது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை பற்றிய அறிக்கைகள் கிடைத்துள்ளன.

எனவே இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஆணைக்குழு கோரியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின்போது, 2023, டிசம்பர் 17 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான இரண்டு வார காலப்பகுதியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் இதன்போது, சித்திரவதை, மனிதாபிமானமற்ற நடத்தை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் நடவடிக்கையுடன் தொடர்புடைய தடுப்புக்காவல்கள் போன்ற பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஏனவே இந்த நடவடிக்கைகள், ‘நியாயம்’ என்று பொருள்படும் ‘யுக்திய’ என்ற தலைப்பிற்கு முரணானது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர்களை எல்லா நேரங்களிலும் கண்ணியமாக நடத்துவதன் மூலம் இந்த உரிமையை நிலைநிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

அத்துடன் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றின்படி, சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்ட போதிலும் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டவர்கள் பதவியில் உள்ளனர் என்பதையும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...