5 6
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

Share

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழித்தது போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தையும் அழித்துள்ளார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பல்வேறு மோதல்கள் வெடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் ஒரே பக்கம் இருப்பதாகவும், யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது ராஜபக்சவின் வருகை பொருத்தமானதல்ல, எனவே சுதந்திரமாக செயற்படுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...