5 6
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

Share

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழித்தது போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தையும் அழித்துள்ளார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பல்வேறு மோதல்கள் வெடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் ஒரே பக்கம் இருப்பதாகவும், யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது ராஜபக்சவின் வருகை பொருத்தமானதல்ல, எனவே சுதந்திரமாக செயற்படுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...