8 47
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி

Share

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டடம் ஒன்றிற்குள் இருந்து விரல்களைக் கொண்டு அமைதிச் சின்னத்தைக் காண்பிக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த சந்திப்பிலோ இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்தோ அல்லது யார் இந்த புகைப்படத்தை எடுத்தார்கள் என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த புகைப்படம் தொடர்பில் ஆராய்ந்து ஊடகங்களுக்கு அறிவிப்பை வழங்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பின்னர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யோஷித, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானையில் காணி ஒன்றுடன் தொடர்புடைய பணமோசடி தொடர்பில் ராஜபக்ச சனிக்கிழமை பெலியத்தவில் கைது செய்யப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு 5ம் இலக்க நிதிச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித மீது குற்றம் சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பது உறுதியானதை அடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...