tamilni 213 scaled
இலங்கைசெய்திகள்

யால தேசிய பூங்கா விடுத்துள்ள எச்சரிக்கை

Share

யால தேசிய பூங்கா விடுத்துள்ள எச்சரிக்கை

உணவுக்காக வாகனங்களில் வலுக்கட்டாயமாக நுழைவதற்கு பெயர் பெற்ற யானையான நந்திமித்ராவுக்கு உணவளிக்க வேண்டாம் என்று யால தேசிய பூங்கா நிர்வாகம், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யானைக்கு மக்கள் உணவளிப்பதன் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாக யால தேசிய பூங்கா கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யானை யாருக்கும் தீங்கு விளைவிக்காது, ஆனால் அதன் தும்பிக்கையை வாகனங்களில் செலுத்தும்போது அதன் தந்தங்கள், வாகனங்களில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்று கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குறித்த யானை வாகனங்களுக்குள் உணவு தேடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கதிர்காமம் – சித்துல்பவ்வ வீதியிலும் திஸ்ஸ-சித்துல்பவ்வ வீதியிலும் இந்த யானை அடிக்கடி நடமாடித்திரிகிறது.

Share
தொடர்புடையது
01 4
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை? இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு சந்தேகம்!

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் தமக்குத் தெரியாமல் இரகசியப்...

02 4
செய்திகள்இலங்கை

ஈரான் உச்சத் தலைவர் கமேனியின் மறைவு: கொழும்பு தூதரகத்தில் ரணில் விக்ரமசிங்க அஞ்சலி!

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) திடீர் மறைவுக்கு ஆழ்ந்த...

03 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் – வவுனியா மின்சார விநியோகத்தில் கோளாறு: நாட்டின் பல இடங்களில் மின்தடை!

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர்...

22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...