tamilni 213 scaled
இலங்கைசெய்திகள்

யால தேசிய பூங்கா விடுத்துள்ள எச்சரிக்கை

Share

யால தேசிய பூங்கா விடுத்துள்ள எச்சரிக்கை

உணவுக்காக வாகனங்களில் வலுக்கட்டாயமாக நுழைவதற்கு பெயர் பெற்ற யானையான நந்திமித்ராவுக்கு உணவளிக்க வேண்டாம் என்று யால தேசிய பூங்கா நிர்வாகம், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யானைக்கு மக்கள் உணவளிப்பதன் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாக யால தேசிய பூங்கா கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யானை யாருக்கும் தீங்கு விளைவிக்காது, ஆனால் அதன் தும்பிக்கையை வாகனங்களில் செலுத்தும்போது அதன் தந்தங்கள், வாகனங்களில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்று கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குறித்த யானை வாகனங்களுக்குள் உணவு தேடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கதிர்காமம் – சித்துல்பவ்வ வீதியிலும் திஸ்ஸ-சித்துல்பவ்வ வீதியிலும் இந்த யானை அடிக்கடி நடமாடித்திரிகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...