19 1
இலங்கைசெய்திகள்

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

Share

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

திசைகாட்டியினர் பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர் என்றும், அவர்களிடம் அரசியல் அனுபவம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கடுமையாக சாடியுள்ளார்.

மாத்தறையில் நேற்று(04.11.2024) நிகழ்வொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். நாட்டின் மிகவும் கடினமான காலங்களில் தங்கள் அனுபவத்தால் நாட்டைக் காப்பாற்றியவர்கள் இங்கே உள்ளனர்.

அரசாங்கத்தை நாங்கள் நடத்தி செல்ல வேண்டியுள்ளது. வங்குறோத்து நிலை நமது கடனை மீண்டும் நிலையானதாக மாற்றியுள்ளது.

உடன்படிக்கைகளின் படி செயற்பட்டு கடன் நிலையிலிருந்து வெளியே வருவோமென உறுதியளித்துள்ளோம்.

அந்தப் பணியைச் செய்யக்கூடியவர்களை நாம் இங்கு நியமிக்க வேண்டும். அதனால்தான் அனுபவசாலிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்’’ என்றார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....