19 1
இலங்கைசெய்திகள்

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

Share

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

திசைகாட்டியினர் பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர் என்றும், அவர்களிடம் அரசியல் அனுபவம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கடுமையாக சாடியுள்ளார்.

மாத்தறையில் நேற்று(04.11.2024) நிகழ்வொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். நாட்டின் மிகவும் கடினமான காலங்களில் தங்கள் அனுபவத்தால் நாட்டைக் காப்பாற்றியவர்கள் இங்கே உள்ளனர்.

அரசாங்கத்தை நாங்கள் நடத்தி செல்ல வேண்டியுள்ளது. வங்குறோத்து நிலை நமது கடனை மீண்டும் நிலையானதாக மாற்றியுள்ளது.

உடன்படிக்கைகளின் படி செயற்பட்டு கடன் நிலையிலிருந்து வெளியே வருவோமென உறுதியளித்துள்ளோம்.

அந்தப் பணியைச் செய்யக்கூடியவர்களை நாம் இங்கு நியமிக்க வேண்டும். அதனால்தான் அனுபவசாலிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்’’ என்றார்.

Share
தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...