இலங்கைசெய்திகள்

ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்

Share
tamilni 39 scaled
Share

ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்டில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆகஸ்டில் இலங்கையின் வெளித்துறைச் செயற்பாட்டின்படி, ஜூலை 2023இல் பதிவு செய்யப்பட்ட 541 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஒகஸ்டில் பதிவான 325 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. ஜூன் 2023இல் தொழிலாளர்கள் அனுப்பிய தொகையில் மொத்தம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மே 2023 இல் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 454 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஜனவரியில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மார்ச் 2023 இல் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஆகஸ்ட் 2023 இல் வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகள் 26,131 ஆகவும், 2022 இல் பதிவுசெய்யப்பட்ட 311,056 உடன் ஒப்பிடுகையில் 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 197,146 ஆகவும் இருந்தது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...