tamilni 39 scaled
இலங்கைசெய்திகள்

ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்

Share

ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்டில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆகஸ்டில் இலங்கையின் வெளித்துறைச் செயற்பாட்டின்படி, ஜூலை 2023இல் பதிவு செய்யப்பட்ட 541 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஒகஸ்டில் பதிவான 325 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. ஜூன் 2023இல் தொழிலாளர்கள் அனுப்பிய தொகையில் மொத்தம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மே 2023 இல் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 454 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஜனவரியில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மார்ச் 2023 இல் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஆகஸ்ட் 2023 இல் வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகள் 26,131 ஆகவும், 2022 இல் பதிவுசெய்யப்பட்ட 311,056 உடன் ஒப்பிடுகையில் 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 197,146 ஆகவும் இருந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...