12 3
இலங்கைசெய்திகள்

பெருமளவு கடவுச்சீட்டு பல ஆவணங்களுடன் சிக்கிய பெண்

Share

பெருமளவு கடவுச்சீட்டு பல ஆவணங்களுடன் சிக்கிய பெண்

களனி பிரதேசத்தில் போலியான ஆவணங்களுடன் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஜாஎல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ​​5000 ரூபா போலி நாணயத்தாள், போலி தேசிய அடையாள அட்டை, 8 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், 2 வெளிநாட்டு தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம், அரசாங்கத்தின் 11 இறப்பர் முத்திரைகள் மற்றும் ஏனைய ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான இந்த பெண் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...