இலங்கைசெய்திகள்

யாழில் விமானப் படை கண்காட்சிக்கு சென்ற பெண் கைது

tamilnid 4 scaled
Share

யாழில் விமானப் படை கண்காட்சிக்கு சென்ற பெண் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இரண்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.

இதன்போது கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை, பிரதான நுழைவாயிலில் சோதனையிட்ட போதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண் என தெரியவந்துள்ளது .

இவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை விமானப்படையினர் மீட்டுள்ளனர்.

பெண் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...