கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 4 பொதிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்த முதல் செய்தி வெளியானதும், ‘கோல்டன் ஜெல்’ என்ற பொருளை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என பலரும் கூறியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்திலுள்ள 24 வயதுடைய பெண்ணின் கைகளுக்கு இது எவ்வாறு வந்ததென ஆராயப்பட்டது.

இந்த நிலையில் சில கடத்தல்காரர்கள் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்புபட்டு மோசடியான முறையில் இவற்றினை கடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

விமானம் மூலம் நாட்டுக்கு வருபவர்கள் கொண்டு வரும் பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல விமான நிலைய ஊழியர்கள் உதவுகிறார்கள் என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமை என கூறப்படுகின்றது.

அங்கு பணியாற்றும் ஊழியர்கள் என்ற நம்பிக்கையில் பணியாளர்கள் பெரிய அளவில் சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்களை எடுத்துச் செல்வார்களா என்பதை பாதுகாப்புப் படையினர் ஆர்வத்துடன் சரிபார்க்கும் அரிதான சந்தர்ப்பங்களும் உள்ளன.

அதற்கமைய, இந்த ஊழியர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது தங்க ஜெல் கரைசல் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து செல்ல முயற்சித்துள்ளார். எனினும் அவர் ஒழுங்கற்ற முறையில் நடப்பதாக சிசிடிவி கண்காணிப்பில் காட்டிய சந்தேகத்தின் அடிப்படையில், இந்த பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜெல் கரைசல் அடங்கிய 4 பொட்டலங்கள் மேலதிக விசாரணைக்காக தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தங்க ஜெல் குறித்து விசாரணை நடத்தும் போது, ​​தற்போது கடத்தல்காரர்கள் தங்கத்தை ஜெல் வடிவில் தயாரித்து சட்டவிரோதமாக கடத்துவதாக தெரியவந்துள்ளது.

ஜெல்லை மீண்டும் தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...