இலங்கைசெய்திகள்

நடுவானில் பெண்ணுக்கு மாரடைப்பு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

tamilnaadif 7 scaled
Share

பிரித்தானியாவுக்கு பயணித்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண்ணொருவருக்கு இருமுறை ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் விமானம் இத்தாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

Tunis பகுதியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணியொருவர் மாரடைப்பால் அவதிப்பட்டுள்ளார்.

இதன்போது விமான ஊழியர்களும் வைத்தியர் ஒருவரும் மாரடைப்பால் அவதியுற்ற பயணிக்கு CPR அளிக்க முன்வந்துள்ளனர்.

இதனையடுத்து புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே விமானத்தை அவசரமாக தரையிறக்கும் கட்டாயத்திற்கு விமானி தள்ளப்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இத்தாலியின் ஓல்பியா விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

லிபியா நாட்டவரான பெண் தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக் குழுவினரால் அந்த பயணி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன் உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேலதிக வைத்திய சிகிச்சை பெறும் பொருட்டு அந்த பெண் இத்தாலியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அவருடன் அவர் மகனும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....