tamilnaadif 7 scaled
இலங்கைசெய்திகள்

நடுவானில் பெண்ணுக்கு மாரடைப்பு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Share

பிரித்தானியாவுக்கு பயணித்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண்ணொருவருக்கு இருமுறை ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் விமானம் இத்தாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

Tunis பகுதியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணியொருவர் மாரடைப்பால் அவதிப்பட்டுள்ளார்.

இதன்போது விமான ஊழியர்களும் வைத்தியர் ஒருவரும் மாரடைப்பால் அவதியுற்ற பயணிக்கு CPR அளிக்க முன்வந்துள்ளனர்.

இதனையடுத்து புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே விமானத்தை அவசரமாக தரையிறக்கும் கட்டாயத்திற்கு விமானி தள்ளப்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இத்தாலியின் ஓல்பியா விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

லிபியா நாட்டவரான பெண் தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக் குழுவினரால் அந்த பயணி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன் உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேலதிக வைத்திய சிகிச்சை பெறும் பொருட்டு அந்த பெண் இத்தாலியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அவருடன் அவர் மகனும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...