30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

Share

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா என்ற பெண் 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்ய சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

வீட்டின் நெருக்கடி உட்பட பல கனவுகளுடன் அவர் வெளிநாடு சென்றிருந்தார். கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பி விடுவதாக அவர் தனது கணவரிடம் கூறியிருந்தார்.

எனினும் அதன் பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காதமையினால் அவரது கணவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் இலங்கைக்கு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையிடம் மேற்கொண்ட விசாரணையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, ​​ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா 2 பொதிகளுடன் வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் புறப்பட்டுச் சென்றமை தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து, ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்தனர்.

விசாரணையின் போது, ​​தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு அந்த பெண் சென்றதாக தெரிவித்துள்ளார்.

எனினும் தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வின் போது எந்தப் பெண்களும் இல்லை என்று குடியிருப்பாளர்கள் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...