யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு

24 664ae1d8aa9af

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் புத்தூர் – கனகம்புளியடி வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் பிறந்தநாளில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி கனகம்புளியடி – வீரவாணி சந்தியில் இன்று (20) காலை துவிச்சக்கர வண்டியில் பால் கொண்டு சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version