12 43
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் நாயிற்கு மரண தண்டனை வழங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

Share

முல்லைத்தீவில் (Mullaitivu) நாயை தூக்கிலிட்ட விவகாரத்துடன் தொடர்புடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் இணக்க சபையில் நேற்று முன்தினம் (25) வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்பு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, சசிதா என்ற பெண், தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக காவல்துறையில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்கள் நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ள நிலையில் அதற்கு நாயின் உரிமையாளரும் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகு நீதவான்கள் குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாயை வாங்கிய ஆட்டின் உரிமையாளரான பெண், நாயை தூக்கிலிட்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

குறித்த விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் மக்கள் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை நாயின் உரிமையாளரான பெண் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ”தன்னுடைய நாய் வீட்டில் இருந்ததாகவும், குறித்த ஆடு தனது வீட்டிற்கு வந்த போது தான் நாய் கடித்தது.

அத்துடன் ஆட்டின் உரிமையாளர் கோரிய நஷ்ட ஈட்டை என்னால் வழங்க முடியாததால் நாயை அவரிடம் ஒப்படைத்தேன்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...