பீரிஸ்
அரசியல்இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடைகள் விரைவில் விலகுமா? – மீள்பரிசீலனை செய்வதாக அரசு அறிவிப்பு

Share

புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மீள்பரிசீலனை செய்யப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்ய வரவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பிலும் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்ததும் தடைகளை விதித்திருந்தது. இந்தநிலையில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு நாட்டுக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு நாட்டுக்குள் வருவது?என்று கொழும்புச் செய்தியாளர் ஒருவர், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

“புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அரசு மீள் பரிசீலனை செய்யத் தயாராக இருக்கின்றது. கூட்டமைப்புடனான சந்திப்பின்போதும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது” என்று பீரிஸ் குறிப்பிட்டார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...