2 35
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் மக்களை அச்சுறுத்தக் கூடாது – நாமல்

Share

அரசாங்கம் மக்களை அச்சுறுத்தக் கூடாது – நாமல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களை அச்சுறுத்தக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம்(17) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் மக்களை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களையும், பொதுமக்களையும் அரசாங்கம் ஒடுக்க முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கிராமிய பிரதிநிதிகளுக்கு இந்த விடயத்தை அரசாங்கம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மாத்தளை, அகுரெஸ்ஸ மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ போன்ற பகுதிகளில் பொதுமக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...