tamilnif 3 scaled
இலங்கைசெய்திகள்

கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவித்தல்

Share

சர்வதேச அளவில் வர்த்தகம் தடைபட்டாலும் கோதுமை மாவின் விலையில் எந்த மாற்றமும் நடைபெறாது என நாட்டின் முன்னணி கோதுமை மா வழங்குநர்களான செரண்டிப் மற்றும் ப்ரிமா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆறு மாதங்களுக்கு போதுமான கோதுமை தானியங்களை கிடங்குகளில் பாதுகாத்துள்ளதாகவும் இதனால் அதிக விலை திருத்தங்கள் இல்லாமல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ளதாகவும் குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

செங்கடல் பதற்றம் காரணமாக எதிர்காலத்தில் கப்பல் பயணங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், உள்நாட்டு சந்தையில் பெரும்பாலான விநியோகத்தை வழங்கும் இரு நிறுவனங்களும், சமீபத்திய நெருக்கடியின் போதும் கோதுமை தானியங்கள் மற்றும் கோதுமை மாவை போதுமான அளவு கையிருப்பு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

இதனால் கோதுமைமாவின் விலை ஏற்றம் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என இரு நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...