7 43
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வட்சப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையில் வட்சப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) வட்சப் (WhatsApp) கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மேலும, வட்சப் பயனர்களின் கணக்குகள் ஊடுருவல் செய்யப்படும் அபாயம் நாட்டில் அதிகளவில் உள்ளதால், மூன்றாம் தரப்பினருடன் எந்த ஒரு கடவுச்சொல்லையும் (OTP) பகிர வேண்டாம் கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

 

இதுவரையில் மூன்று வட்சப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

 

மேலும், Zoom ஊடாக கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதற்கான codeகள் உள்ளிடுமாறு வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் செய்திகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இலங்கையர்களின் வட்சப் கணக்குகள் ஊடுருவல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரான முஜிபுர் ரஹ்மானின் வட்சப் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...