8 43
இந்தியாசெய்திகள்

இந்திய அரசியல் களத்தில் ஒரு தனித்துவமான பதிவை முன்வைத்துள்ள நடிகர் விஜய்

Share

இந்திய அரசியல் களத்தில் ஒரு தனித்துவமான பதிவை முன்வைத்துள்ள நடிகர் விஜய்

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் அதிகாரபூர்வமாக நுழைந்துள்ள இந்திய (India) நடிகர் விஜய் (Vijay), தனது முதல் உரையிலேயே அதிகளவான மக்களின் ஆதரவை பதிவு செய்துள்ளார்.

அவரின் முதல் உரையானது, தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

இதன்போது, ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தென்னிந்திய திரையுலக நடிகரான விஜய், ஒரு அரசியல் தலைவராக தனது முதல் உரையை நிகழ்த்திய போதே மக்களின் ஆதரவு இந்தளவுக்கு காணப்படுகின்றமை இந்திய அரசியல் அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அரசியலில் அவரின் நகர்வானது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளதுடன் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில், திரையுலகிலிருந்து பொது வாழ்க்கைக்கு மாறுவதற்கு வலுவான ஆதரவு எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், தனது உரையின் போது இந்திய தமிழர்கள் மாத்திரமல்லாமல் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவும் தமக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதுடன், தனது அரசியல் பயணமானது இலங்கை தமிழர்களையும் சார்ந்திருக்கும் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...