YZsE2XyN41hykGO0NtC1O41etnd7vF3L
இலங்கைசெய்திகள்

இலங்கை அழகி என்றால் என்ன? – நஷ்டஈடு தரத்தான் வேண்டும்!!

Share

இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த திருமதி உலக அழகி போட்டியின் இறுதி முடிவுகளை மாற்றுவதில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த வாக்குமூலத்தில் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்காக புஷ்பிகா டி சில்வா தன்னிடம் பகிரங்க மன்னிப்பும் கோரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் இழப்பீடு தொகையை செலுத்தி மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர்கள் மூலம் அனுப்பிய பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

#srilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 13
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான பயணம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில்,...

p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...