5 7
இலங்கைசெய்திகள்

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும்! முன்வைக்கப்பட்ட கருத்து

Share

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும்! முன்வைக்கப்பட்ட கருத்து

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய ரோசி சேனநாயக்க, முன்னாள் அரசாங்கத்தின் கீழ், இலங்கை அதன் நெருக்கடியிலிருந்து மீட்கப்பட்டதாகவும், முழுமையாக மீள இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் நிறுவப்பட்டு, அரசாங்கம் பாதீட்டை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணை தாமதமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நன்மை பயக்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வருமானத்தை அதிகரிக்கவும், செலவினங்களைக் குறைக்கவும், ஊழலை ஒழிக்கவும் சர்வதேச நாணய நிதியம் கோருகிறது நல்லாட்சி மூலம் தேசத்தை அபிவிருத்தி செய்ய உதவும் ஒரு முறையான செயல்முறையை அந்த நிதியம் கோடிட்டு காட்டியுள்ளதாகவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் என்ன சாதித்துள்ளது என கேள்வி எழுப்பிய ரோசி சேனாநாயக்க, அவர்கள் தெரிவு செய்யப்படுவதற்காக பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியுள்ளனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...